பாதையை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளான கார்!!

3320

விபத்து..

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அமைக்கப்பட்ட மதகுடன் மோதி பாதையை விட்டுத் தடம்புரண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காரினை செலுத்திச் சென்றவரும், காரில் பயணம் செய்த இரண்டு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.