குவைத் நாட்டில் இருந்து..
குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 112 பேர் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். கோவிட் வைரஸ் தொற்று காரணமாக தாங்கள் பணி செய்யும் வீடுகளில் இருந்து தப்பி சென்று குவைத் பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட இலங்கையர்களே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த இலங்கையர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அலுவலகம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களிடம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.