வவுனியா உட்பட நாட்டு மக்களுக்கு காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

3643

காலநிலை..

நாட்டின் பல பகுதிகளில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய நாளைய தினம் பல மாவட்டங்களில் அதீத வெப்பத்தால் மக்கள் பாதிக்கப்படலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, பதுளை, காலி, மாத்தறை, பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் அதிக அளவு வெப்பமான காலநிலை நிலவும்.

இந்த காலநிலை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளபபட்டுள்ளது.

நாளையதினம் அதிகமாக நீர் அருந்துமாறும், நிழல் உள்ள இடங்களில் முடிந்த அளவு ஓய்வு எடுக்குமாறும் மக்களிடம் கோரப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

சிறுபிள்ளைகளை தனியாக வாகனங்களில் விட்டு செல்ல வேண்டாம். அதிகமாக வெளியிடங்களில் கடினமான சேவை செய்வதனை தவிர்க்க வேண்டும். வெள்ளை அல்லது இளம் நிறத்திலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.