வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் ஐவர் கைது : வாகனங்களும் பறிமுதல்!!

1556

புத்தாண்டு தினத்தில்..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் ம.து.போ.தை.யி.ல் வாகனத்தினை செலுத்திய ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களின் வாகனத்தினை ப.றிமுதல் செய்துள்ளனர்.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றொஷான் சந்திரசேகர தலைமையில் நேற்று (14.04.2021) இரவு முன்னெடுக்கப்பட்ட திடீர் சு.ற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வவுனியா நகர் பகுதியில்,

ம.து போ.தை.யி.ல் வாகனத்தினை செலுத்திய கு.ற்றச்சாட்டில் ஐந்து நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மூன்று மோட்டார் சைக்கிள், இரண்டு முச்சக்கரவண்டிகள் என்பவற்றினையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் வாகனங்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.