வவுனியாவில் திறக்கப்பட்ட தனியார் கல்லூரிகள் : மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!!

2552

தனியார் கல்லூரிகள்…

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் நேற்றையதினம் (24.04.2021) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மறு அறிவித்தல் வரை தனியார் கல்லூரி வகுப்புக்கள் , பிரத்தியோக வகுப்புக்கள் என்பனவற்றிக்கு தடை உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டதுடன் இதனை மீறி செயற்படுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வவுனியா நகரின் சில தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் கல்வி நடவடிக்கை வழமை போல இடம்பெறும் என மாணவர் சமூகமளிக்குமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் இன்றையதினம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்த மாணவர்களை திருப்பியனுப்பிருந்தனர்.

அரசாங்க அதிபரின் உத்தரவினையடுத்து பெரும்பான்மையான தனியார் கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான சில கல்லூரி நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் கண்டனத்துக்குறியது என பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.