இலங்கையில் நாளை இரவு 11 மணிமுதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பயணத்தடை : மக்கள் நடமாடத்தடை!!

4395

பயணத்தடை..

நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இந்த தடை தாக்கம் செலுத்தாது அவர் கூறியுள்ளார்.

குறித்த நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விமான நிலையம் செல்லவும், நோயாளர்களை இடமாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.