கொரோனா தொற்றினால் வீட்டிலேயே உயிரிழந்த 4 பிள்ளைகளின் தாய்!!

2085

கொரோனா..

காலி, அஹங்கம பிரதேசத்தில் வீட்டில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு கோவிட் வைரஸினால் ஏற்பட்ட நியுமோனியாவே காரணம் என காலி மரண பரிசோதகர் பீ.ஜீ.என்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த 75 வது நான்கு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. அவர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களினால் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்ற ஒருவராகும்.

வீட்டில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.