கொரோனா..

வவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும்,

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (14.05) இரவு வெளியாகின.

அதில், யாழ் பல்கலைக்கழகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள், காவலாளிகள் உட்பட 8 பேரும், வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவருக்கும்,

நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சகலிகினிகம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் இனங்காணப்பட்ட தொற்றாளரான பெண் சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் மரமடைந்துளலளார்.

ஏனைய 12 தொற்றாளர்களையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





