கொரோனா தொற்றில் உயிரிழந்த 22 வயது யுவதி தொடர்பில் வெளியான தகவல்!!

2022

உதாரி விஷ்மிகா..

இலங்கையில் கோவிட் தொற்றில் உயிரிழந்த 22 வயது யுவதி தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. உதாரி விஷ்மிகா யுவதி, காலி, அம்பலங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

அவரது தாய் மற்றும் தந்தை வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர். அம்பலங்கொடையில் உள்ள சிற்றி லெப்பில் பணியாற்றி வருகின்றார். குறித்த யுவதி பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ளார்.

வேறு நோய் என நினைத்தே முதலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவரது நிலைமை மோசமடைந்தமையினால் கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவர் மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். எனினும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார். ஆய்வகத்தில் மிகவும் அவதானமாக பணியாற்றிய போதிலும் அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.