வவுனியாவில் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் வெசாக் வாரம் அனுஸ்டிப்பு!!

2234

வெசாக் வாரம்..

வெசாக் வாரம் வவுனியாவில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. மே மாதம் பௌர்ணமி தினம் புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணம் என்பவற்றை நினைவுபடுத்தி வெசாக் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இம்முறை கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக அமைதியான முறையில் சுகாதார முறைகளையும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி வவுனியாவில் வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.

அந்த வகையில் வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் வவுனியா பிரதேச செயலகம் ஆகியவற்றிக்கு முன்னால் சிறிய வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டும் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டும் அமைதியாக பயணத்தடை நேரத்திலும் வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.