
மதவாச்சி, வகமல்கொல்லாவ பிரதேச வீடொன்றில் பொருட் கொள்ளையிட்ட சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் பொருட் கொள்ளையிட்டபோது அவ் வீட்டு உரிமையாளர் சிறுவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 14 வதான சிறுவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.





