இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை : இன்று 48 பேர் பலி!!

1485

கொரோனா..

இன்றைய தினம் 48 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கோவிட்19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1656 ஆக உயர்வடைந்துள்ளது. ஒரே நாளில் இலங்கையில் பதிவான அதி கூடிய கோவிட் மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் இதுவரையில் 3398 கோவிட் தொற்று உறுதியானவர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்து பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.