வவுனியாவில் நகைக்கடைகளில் கொள்ளையிட்ட பெண் பிடிபட்டார்!!

703

ladyவவுனியாவில் உள்ள நகைக் கடைகளில் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட இளம் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெறுமதியான நகைகளை கொள்வனவு செய்யவுள்ளதாக நகை கடையில் உள்வர்களிடம் கூறி, நகைகளை பார்வையிட்டு அவற்றை எவரும் அறியத சந்தர்ப்பத்தில் குறித்த பெண் கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் நகை கடைகளில் உள்ள சிசிரிவி கமராக்களில் இப் பெண் நகைகளை திருடுவது பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அனைத்து நகைகடைகளிலும் இப் பெண் தொடர்பான தகவல் வழங்கப்பட்டிருந்தன.

நேற்றையதினம் நகர்ப்பகுதியில் உள்ள நகைகடையொன்றுக்கு இவர் வந்த சமயம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு இப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.