நிலவுக்கு செல்லும் இலங்கை யுவதி!!

2290

சந்தனி குமாரசிங்க..

டியர் மூன் என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு பயணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதியான முழு அணியில் இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க என யுவதி இடம்பெற்றுள்ளார்.

இந்த திட்டத்திற்காக 249 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் விண்ணப்பங்களில் 17 பேரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 8 பேருக்கு இந்த சிறப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் இந்த குழுவினர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நிலவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 2019 ஆம் ஆண்டு சந்தனி குமாரசிங்கவுக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனத்தில் விண்வெளி மற்றும் விண்வெளி வீரருக்கான பாடநெறியை கற்க புலமைப்பரிசில் கிடைத்தது.

அந்த பாடநெறியை கற்பதற்கு தனக்குள்ள பொருளாதார சிரமங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர், சந்தலிக்கு உதவிகளை வழங்கியுள்ளார்.