வவுனியா மாவட்டத்தில் 30வயதிற்கு மேற்பட்ட 82.42 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றி வைப்பு!!

1234

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 30வயதிற்கு மேற்பட்ட 82.42 வீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 98,000 மக்கள் வசித்து வருவதுடன் அவர்களில் 80,770 மக்களுக்கு முதலாவது தடுப்பூசிகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவை 84.42 வீதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் வடமாகாணத்தில் 30வயதிற்கு மேற்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தில் 75.74வீதமும் , கிளிநொச்சியில் 79.29 வீதமும், முல்லைத்தீவில் 75.83 வீதமும், மன்னாரில் 69.74 வீதமும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.