பண்டாரிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம்..
கொரோனா தொற்று அச்சம் காரணமாக வவுனியா பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து கிராம சேவையாளர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவையாளர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.