வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் மூவர் மரணம்!!

2429

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூவரே சிகிச்சை பலனின்றி நேற்று (16.08) மரணமடைந்துள்ளனர்.

வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 93 வயதுடைய ஆண் ஒருவரும், வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண் ஒருவரும் என மூவர் இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை கடந்த இரு தினங்களில் வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக 5 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.