வவுனியா மாவட்டம் ஊரடங்கினால் வெறிச்சோடியது : அத்தியாவசிய சேவைகள் வழமை போல்!!

2644

பொது முடக்கம்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா மாவட்ட முழுமையாக முடங்கியுள்ளதுடன் அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இயங்குகின்றன.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நேற்று (20.08.2021) வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியில் இருந்து 30.08.2021 திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் ஊரடங்கு நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் மாவட்டத்தில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் சில வியாபார நிலையங்களும் திறந்துள்ளன.

மேலும் விவசாயிகள், வைத்திய தேவை என்பனவற்றிக்கு செல்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் அனுமதி வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.