நாட்டை நீண்ட காலம் மூடி வைக்க நேரலாம் : தயாராக இருக்குமாறு ஜனாதிபதி மக்களுக்கு அறிவுறுத்தல்!!

1964

ஜனாதிபதி மக்களுக்கு அறிவுறுத்தல்..

இனிவரும் நாட்களில் இந்த நாட்டை நீண்ட காலத்திற்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென,

தான் கேட்டுக்கொள்வதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று (20.08.2021) இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பிற்பலளவில் அறிவித்திருந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் ஜனாதிபதி மக்களுக்காக உரையாற்றினார். இதன்போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.