புதிய கொரோனா திரிபு நாட்டில் பரவுவதை தவிர்க்க முடியாது : விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!!

909

புதிய கொரோனா திரிபு..

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

C 12 என்ற குறித்த கொரோனா வைரஸ் திரிபு தென்னாப்பிரிக்காவில் பரவி வருகின்றது. இதற்கு முன்னர் அங்கு பரவலடைந்த வைரஸ் திரிபும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளில் பரவிய கோவிட் வைரஸ் திரிபுகளும் நாட்டில் அடையாளம் காணப்பட்டன. புதிய வைரஸ் திரிபுகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியுமாயின் அதனை தவிர்க்க முடியும். ஆனால் அதனை இனங்காண்பதில் தாமதமாவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் குறிப்பிட்டு்ள்ளார்.