ஊரடங்கு..
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு 15 பில்லியன் ரூபாவை அரசு இழந்து வருகின்றதாக இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 13ஆம் திகதியுடன் நாட்டை முழுமையாக திறக்க வேண்டுமென்பதே தனது தனிப்பட்ட கருத்தாக காணப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் நாடு திறக்கப்படாவிட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
நாட்டிலுள்ள 45 இலட்சமான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நாடு முடக்கப்படுமானால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.