வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தினையும் மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!

1488

வவுனியாவில்..

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தெற்று மற்றும் கோவிட் இறப்பு என்பன சடுதியாக அதிகரித்துள்ள போதும் அதனைப் பொருட்படுத்தாமல் வர்த்தக நிலையங்கள் சில திறந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுவதுடன்,

நடமாடும் வர்த்தகர்களும் ஒரே இடத்தில் வாகனங்ளை நிறுத்தி மக்களை ஒன்று கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீதியில் செல்பவர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்கள் என சிலர் முகக்கவசமின்றியும் காணப்பட்டனர்.

வங்கிகள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனையகங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஒரு கதவுடன் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை நோக்கி மக்கள் அதிகளவில் வந்து செல்வதுடன் வங்கிகளிலும் மருந்தகங்களிலும் அதிக சன நெரிசலையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை இந்ந நிலை தொடருமானால் வவுனியாவின் கோவிட் பரம்பலை கட்ப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.