ஊரடங்கு..

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும்.

எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக் கருத்திற் கொண்டு,

தற்போதைய முடக்கத்தை இம்மாதம் 18ஆம் திகதி வரையும் அல்லது ஒக்டோபர் 2ஆம் திகதி வரையும் நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 20.08.2021 அன்று அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் இரு தடவைகள் நீடிக்கப்பட்டு வரும் 13.09.2021 அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-தமிழ்வின்-





