வவுனியாவிற்கு 81 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன : இரண்டாவது தடுப்பூசி விரைவில்!!

1829

தடுப்பூசி..

இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்காக வவுனியா மாவட்டத்திற்கு 81 ஆயிரம் தடுப்பூசிகள் வருகின்றன என மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் தடுப்பூசி வழங்கல் குறித்து இன்று (05.09.2021) கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கொழும்பில் இருந்து 81 ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவிற்கு வருகின்றன. செவ்வாய் கிழமையில் இருந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரித கதியில் சுகாதாரத்துறையினர் ஊடாக இடம்பெறும்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் பாதிப்புக்குள்ளாகுவோரில் 60 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமாகவுள்ளமையால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதுடன், இதுவரை தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் வழஙகப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அந்த அந்த கிராம அலுவலர் பிரிவுகள் ஊடாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

எனவே மக்கள் தாமாக முன்வந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் தடுப்பூசிகளைப் பெற்று கோவிட் தொற்றில் இருந்து பாதுகாப்பைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.