இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

1478

முக்கிய அறிவிப்பு..

எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படலாம் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் விசேட வைத்திளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு வழங்குவதற்கு பதிலாக பிரதான மத்திய நிலையங்கள் பலவற்றில் மாத்திரம் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.