வவுனியா பிரதேச செயலகம் முன்பாக பட்டதாரி பயிலுனர்கள் போராட்டம்!!

1586

பட்டதாரி பயிலுனர்கள்..

பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலத்தை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு வருட பயிற்சி முடித்த பட்டதாரி பயிற்சியாளர்கள் இருக்கும் இடங்களில் தொடர்ந்து பயிற்சி அளிக்கவும் அந்த காலத்திற்கான பயிற்சி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பிரதேச செயலகம் முன்பாக இன்று (29.09) மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குறுதியளித்தபடி 53000 பட்டதாரி பயிலுனர்களையும் செப்டம்பர் 3ம் திகதியிட்டு விரைவில் நியமனமாக்கு எனும் தொனிப்பொருளில் இக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் 20க்கு மேற்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.