பயணக் கட்டுப்பாடு தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு வெளியானது!!

2931

பயணக் கட்டுப்பாடு..

நாளையில் இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாடளாவிய ரீதியில் தொடருந்துகளும் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) அறிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளைய தினம் நீக்கப்பட்டாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பயணிகள் பேருந்துகள் நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு ஒவ்வொரு மாகாணத்துக்குள் மாத்திரம் இயங்கும் எனவும் மாகாணங்களுக்கு இடையில் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.