6 மாதங்களின் பின் வவுனியாவை வந்தடைந்தது யாழ்தேவி புகையிரதம்!!

1156

யாழ்தேவி..

கொழும்பு – காங்கேசன்துறை யாழ் தேவி புகையிரதம் 6 மாதங்களின் பின் இன்று (03.11) வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

நாட்டில் கொவிட் பரம்பல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான புகையிரதப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து காலை 5.55 இற்கு காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் வடமாகாணத்தின் முதலாவது மாவட்டமாக வவுனியாவை மதியம் 12 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து தனது பயணத்தை யாழ் நோக்கி ஆரம்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.