வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

3365

எல்லப்பர் மருதங்குளம்..

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீட்டிற்கு சென்ற அயலவர்கள் இளைஞன் வீட்டில் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், குறித்த இளைஞனின் மரணம் கொலையா, தற்கொலையா என சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.