வவுனியா சமயபுரம் வீதியின் நடுவே பல நாட்களாக கொட்டப்பட்டிருக்கும் கிரவல் : மக்கள் சிரமம்!!

1715

சமயபுரம்..

வவுனியா சமயபுரம் – மணிபுரம் பிரதான வீதி அபிவிருத்தி பணிக்காக வீதியின் நடுவே கொட்டப்படிருக்கும் கிரவலினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறித்த வீதி பல வருடங்களாக புனரமைப்புமின்றி காணப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதி செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த வீதி செப்பனிடும் பணிக்காக. இரு வாரத்திற்கு முன்னர் வீதியின் நடுவே ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கிரவல் கொட்டப்பட்டது. அதன் பின்னர் எவ்வித பணியும் முன்னெடுக்கப்படாது வீதியில் கிரவல் அவ்வாறே காணப்படுகின்றது.

இதன் காரணமாக 20க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வாகனத்தினை அவர்களது வீட்டிற்கு எடுத்துச்செல்ல முடியாத நிலைமையுடன் நடந்து கூட செல்ல முடியவில்லை .

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் வசிப்பவர் ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டு அவரை ஏற்றுவதற்கு வாகனம் செல்ல முடியாத நிலையில் அவரை ஒரு கிலோமீற்றர் தூரம் தூக்கிச்சென்றே வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனத்தினை செலுத்தி அக் கிரவல்களை வீதி செப்பனிடும் பணிக்கு பயன்படுத்துமாறு கோருவதுடன் அல்லது அவற்றை வீதியிலிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.