மின்தடை..
நாட்டில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொத்மலையிலிருந்து பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், பெரும்பாலான பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.