வெடித்து சிதறிய சிலிண்டர் : தப்பியோடிய மக்கள் : பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

1799

கடவத்தை பிரதேசத்தில் எரிவாயு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
அவர் இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர வைத்திய கண்கானிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடத்தி செல்லப்பட்ட உணவகத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தனது மனைவி எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் போது தீ பரவியதில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவரது கணவர் மிலிந்த பிரேமரத்ன, தெரிவித்துள்ளார்.

“கோவிட் தொற்றின் பின்னர் எங்கங்கள் வர்த்தகம் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் பேலியகொடையில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தினோம். கடந்த 6ஆம் திகதி மனைவி திடீரென அழைப்பேற்படுத்தி உடலில் தீப்பற்றியதாக கூறினார்.

10 நிமிடங்களில் நான் அந்த இடத்திற்கு சென்றேன். மனைவி பாரிய தீக்காயங்களுக்குள்ளாகியிருந்தார். அவரது கை மற்றும் முகம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது.

எரிவாயு வெடிப்பு ஏற்பட்டமையினால் உணவகத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். சிறு பிள்ளைகள் உள்ளமையினால் அடுப்பில் ஏற்பட்ட தீயை அணைத்து விட்டு அருகில் இருந்த நாட்காலியில் அமர்ந்திருந்தனர்.

மனைவி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிசிக்சை பெற்ற வருகின்றார். 30 வருடங்கள் எரிவாயு அடுப்பில் உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். ஒரு நாளும் இவ்வாறான சம்பவம் ஒன்றிற்கு முகம் கொடுத்ததில்லை.

எரிவாயுவின் தரம் குறித்து எனக்கு பாரிய சந்தேகம் ஒன்று உள்ளது. இதனால் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அத்துடன் இந்த பிரச்சினையை விட்டு விட மாட்டேன். மனைவியை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு ஒரு நாளும் முடியாது.

அந்த வேதனை எனக்கு எப்போதும் இருக்கும். நாளைய தினம் இன்னும் ஒருவருக்கு அவ்வாறான நிலைமை ஏற்பட கூடாது. நான் இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முறைப்பாடு செய்துள்ளேன்.

எரிவாயு அடுப்பிற்கு தீக்குச்சி பற்ற வைக்கும் போது திடீரென தீப்பற்றியது. ஒரு மாதத்திற்கு முன்னரே ரெகுலேட்டர் கொள்வனவு செய்தோம்.

எரிவாயு தட்டுப்பாடிற்கு மத்தியில் அதிக விலை கொடுத்தே பெற்றோம். இறுதி இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.