
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கின் வீடு கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.யுவராஜ் சிங் மிகவும் மோசமாக விளையாடி 21 பந்துகளில் 12 ஓட்டங்களே எடுத்தமை ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதன் காரணமாக அவரது ரசிகர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது போன்று பல்வேறு சந்தர்பங்களில் இந்திய அணி தோல்வியை தழுவும் பொது வீரர்களின் வீடுகள் தாக்கப்படுவது இந்தியாவில் வழமையான ஒரு செயலாக மாறி வருகின்றது.
யுவராஜ் சிங் 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெற்றிபெற காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..





