மின் தடை..
கொழும்பின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் மேலும் சில பிரதேசங்களிலும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையின் காரணமாக பொது மக்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தற்போது மூன்று மின் விநியோக கட்டமைப்புகளின் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனுராதபுரம் – ஹபரணை, லக்ஷபான – அதுருகிரிய மற்றும் கொத்மலை – பியகம ஆகிய மின் விநியோக கட்டமைப்புகளின் மின்சார விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளாா்.