கொரோனா பயத்தால் மனைவி, மகள்களுக்கு மருத்துவர் செய்த மோசமான செயல்!!

1421

உத்தர பிரதேசம்..

உத்தர பிரதேசத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவி அனைவரையும், கொன்று.விடும் என்ற பயத்தில் மருத்துவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சுஷில்குமார். இவரது மனைவி சந்திரபிரபா. இவர்களுக்கு ஷிகார் சிங், குஷி சிங் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

கொரோனா தொற்றால் கடந்த சில நாட்களாக மன உளைச்சரில் இருந்த சுஷில்குமார், நேற்று முன் தினம் தேனீரில் விஷம் கலந்து கொடுத்து மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்துவிட்டு, போலீசில் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, சுஷில்குமாரை கைது செய்தனர். கொரோனா பயத்தால் மனைவி மற்றும் மகள்களை மருத்துவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.