யாழில்..
யாழ். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பினை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 07.45 மணியளவில் கொடிகாமம் – சாவகச்சேரி இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த இளைஞன் விசேட தேவையுடையவர் எனவும் அதனால் ரயில் வந்தது தெரியாமல் அவர் அந்த தண்டவாளத்திலிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.