
T20 உலக கிண்ணத்தை கைவிட்டதற்கு மந்தமாக ஆடிய யுவராஜ் சிங்தான் காரணம் என ரசிகர்கள் விமர்சனங்களை பரப்பி வருகின்றனர். இந் நிலையில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி யுவராஜ் சிங்கிற்கு ஆதரவு அளித்துள்ளார்.
இது பற்றி ஊடகங்களுக்கு பதிலதித்த டோனி, யுவராஜ் சிங் தன்னால் முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சித்தார். கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட நபரை குற்றம் சாட்டுவதில் எந்த பயனும் இல்லை.
மோசமான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடவேண்டும் என்று எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் விரும்புவதில்லை .யுவராஜ் சிங்கை பொறுத்தவரை அது அவருக்கான நாள் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தனது இடத்தை இழந்துள்ளார். இந்த நிலையில், நடந்து முடிந்த T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளில் வெறும் 100 ஒட்டங்கள் மட்டுமே எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அவரது கிரிக்கெட் எதிர்காலம் முடிவிற்கு வந்துள்ளதாக சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





