
இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது என்பதை விட முக்கியமானதாக பேசப்பட்ட விடயம், போட்டியின் பின்னர் சங்கக்கார விராத் கோஹ்லியிடம் என்ன கூறினார் என்பதே.
இது குறித்து எஸ் எப்.எம் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது..
உண்மையில் கோஹ்லி எனக்கு வாழ்த்துக்களை கூறினார், அதனை விட கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படுபவர் கோஹ்லி, அவர் மிகச் சிறந்த வீரர், அவரது திறமைக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்தேன்.
இந்திய அணி தோல்வியை சந்திக்கும் தருணத்தில் கூட நான் அரைச்சதம் பெற்றதும் முதலில் வாழ்த்துக்களைக் கூறியது அவர் தான்.
-நன்றி News First –






