அறநெறிப் பாடசாலை..

வவுனியா கற்குளம் படிவம் 4 இல் ஸ்ரீ நாகம்பாள் அறநெறி பாடசாலை மாணவர்கள் மரநிழலில் இருந்து கற்றுவந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி அறநெறி பாடசாலை புதிய கட்டிடம் இன்று (01.02.2022) மாணவர்களின் அறநெறி செயற்பாடுகளுக்காக கையளிக்கப்பட்டது.

நயினாதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் திரு இராமலிங்கம் நடராசா அவர்களின் ஓராண்டு திதியை முன்னிட்டு தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக இவ் அறநெறி பாடசாலை அமைக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்ததுடன் மாணவர்களுக்கான கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.





