மரக்கன்றுகள் நாட்டி வைப்பு..

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (04.02.2022) 500க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

அந்த வகையில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் பி.ஏ சரத் சந்திர, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிறி ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதி , பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் பிரிவுகள், பாடசாலைகள், உள்ளிட்ட அரச திணைக்களங்களில் மரநடுகை இடம்பெற்றது.






