வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று!!

3117

கொரோனா தொற்று..

வவுனியா, மரக்காரம்பளை வீதியில் நேற்று காலை மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்திருந்தனர்.

இவ்விபத்தில் பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியினைச் சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தததுடன் அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞருடன் தொடர்புகளை பேணியவர்கள் எவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படின் உடனடியாக அப்பகுதி சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.