வவுனியாவில் பெருந்திரளான பெண்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாடு!!

1172

பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாடு..

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட மகளிர் மாநாடு பெருந்திரளான பெண்களின் பங்கேற்புடன் வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை (19.02) இந்நிகழ்வு இடம்பெற்றது.

வன்னி தேர்தல் மாவட்டத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவிலான பெண்கள் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மகளிர் மகத்துவத்தை உலகறியச் செய்யும் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தை உயிரோட்டமாக்கும் வகையில் இம் மாநாடு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி கூட்டம் ஒன்றில் முதன் முதலாக அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

l