மின்துண்டிப்பு தொடர்பில் மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!!

1297

மின்துண்டிப்பு..

நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

இதன்படி, ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும்,

ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.