
நெடுங்கேணி பிரசேத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்று அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் உடல் பொலிஸரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவரது உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியதையடுத்து, அவரது உடல் நீதவான் உத்தரவுக்கு அமைய அனுராதபுரம் பகுதி மயானம் ஒன்றில் பொலிஸாரால் அடக்கம் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





