வவுனியாவில் எரிபொருள் நிலையங்களில் டீசல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!!

1776

டீசலுக்கு தட்டுப்பாடு..

வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று (28.02.2022) காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எரிபொருள் (பெற்றோல் மற்றும் டீசல்) இன்மை காரணமாக நகரிலுள்ள ஓர் எரிபொருள் நிலையம் மூடப்பட்டதுடன் ஏனைய எரிபொருள் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை வேளையில் எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டுள்ளன.

அத்துடன் சில எரிபொருள் நிலையத்தில் டீசல் இல்லை என பாதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகன சாரதிகளும் எண்ணை நிரப்புவதற்காக முண்டியடித்துக் கொண்டு வாகனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டதன் காரணமாக சில எண்ணை நிரப்பு நிலையங்கள் முன்னால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் டீசல் தேடி ஒவ்வொரு எண்ணை நிரப்பு நிலையங்களை நோக்கிச் சென்று வருவதாகவும் இதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.