நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற இரு இளைஞர்கள் மாயம் : தேடும் பணி தீவிரம்!!

1106

நீர்வீழ்ச்சியில்..

வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

21 மற்றும் 22 வயதுயுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,காணாமல்போயுள்ள இருவரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.