அமெரிக்க டொலர்..

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு 38 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

புத்தாண்டின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த சலுகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அந்நிய செலாவணி வருமானத்தை கொண்டு வருவதற்கான ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.




