முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகனம் மோதி விபத்து!!

1276

விபத்து..

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு உணவு ஏற்றி வந்த முச்சக்கர வண்டி ஒன்று கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (08.03) மதியம் பாலமுனை பிரதான வீதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்னால் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது, முச்சக்கர வண்டியின் சாரதி தெய்வாதீனமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இச் விபத்துச் சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.