நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் நேரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

1665

மின்வெட்டு..

நாளைய தினம் (10.03.2022) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் தடையை நடைமுறைப்படுத்த உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 1 மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.