வவுனியாவில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்த குடும்பத்தினருக்கு இராணுவத்தினரினால் வீடு நிர்மாணிப்பு!!

2249

இராணுவத்தினரினால்..

வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் வவுனியாவில் மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த கஸ்டத்தில் மத்தியில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் வீடு நிர்மாணிக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வெளிமாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து வந்து 15 வருடங்கள் கடந்து சென்றபோதிலும் நிரந்தர காணி மற்றும் வீடு இன்றி தாண்டிக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் சாமிகண்ணு சாந்தா என்ற பெண் கணவர் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.

கணவர் முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றுவதுடன் சாமிகண்ணு சாந்தா வன்னி பூட்சிட்டியில் பணியாற்றி வருகின்றார். எனினும் இவர்களின் வருமானம் அன்றாட செலவுக்கு மாத்திரமே பொதுமானதாக அமைந்திருந்ததுடன் நிரந்த காணி, வீடு வாங்க முடியவில்லை.

இவரின் வறுமை நிலமையினை அறிந்த வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையக மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க உடனடியாக கிராம சேவையாளரின் உதவியுடன் இராசேந்திரகுளம் பகுதியில் காணியினை பெற்று அதனை சுத்தம் செய்து இரானுவத்தினரின் உதவியுடன் 2மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டினை நிர்மானிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளார்.

தற்போது அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுடன் ஏனைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையுடன் வன்னி இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் வன்னி பிரதேசத்தில் இதுவரையில் 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வீடற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.